அரசியல் கூட்டமாக இருந்தாலும் கமல் ரசிகர்கள் கட்டுக்கோப்பாக உள்ளனரே.. அடடே
அரசியல் கூட்டமாக இருந்தாலும் கமல் ரசிகர்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி கட்டுக்கோப்பாக உள்ளனர் என்பது ஆச்சரியத்தில் ஒன்றாகும்.
Recommended Video

மதுரை: அரசியல் பொதுக் கூட்டமாக இருக்கும் போதிலும் அதிலும் கமல் ரசிகர்கள் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்பதை அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. மேலும் இதை ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சியினரும் கற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக பொதுக் கூட்டம் என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். ஆனால் கமல் பேசவுள்ள ஒத்தகடை பொதுக் கூட்டத்தில் இன்னும் கமல் விழா மேடைக்கும வராத போதிலும் ரசிகர்கள் மிகவும் கட்டுக் கோப்பாக உள்ளனர்.

மற்ற அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் மற்ற பார்வையாளர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் கட்சியினர் நடந்து கொள்வர். ஆனால் கமல் தனது நற்பணி மன்றத்தினரை ராணுவக் கட்டுக்கோப்போடு வைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நமதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ரசிகர்கள் அமர்ந்துள்ளனர். விழா பொது மேடையை நோக்கி கமல் வந்து கொண்டிருக்கிறார்.
அவரது கட்சியின் பெயர், கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.












Click it and Unblock the Notifications