தடம்புரண்டது ஹவுரா விரைவு ரயில்: ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும்
கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஹவுரா விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து தடம் மாற்றுவதற்கு நேற்றிரவு இயக்கியபோது அதன் 4 பெட்டிகள் தடம்புரண்டன.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஹவுரா விரைவு ரயில் நேற்றிரவு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து தடம் மாற்றுவதற்கு இயக்கியபோது எதிர்பாராதவிதமாக நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஆகையால் இன்று காலை புறப்பட வேண்டிய ரயிலானது இன்று நள்ளிரவு கொல்கத்தா புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கபடுகின்றன.

இதே போன்று வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 8 .10 மணி அளவில் கொல்கத்தாவுக்குஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபடுகிறது. இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்காக இந்த ரயில் நேற்று இரவு நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து தடம் மாற்றி இயக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக நான்கு ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
இதனால் கன்னியாகுமரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்பு பணிகள் முடிக்க குறைந்தபட்சம் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் அந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் குளறுபடிகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications