பீச் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட புது பஸ்கள்.. அடடே என வேடிக்கை பார்த்தபடி சென்ற மக்கள்!
கடற்கரை சாலையில் வரிசையாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Recommended Video

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான ஆளுயர பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்து சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவைகள் தலைமை செயலகத்திற்கு அண்ணா சதுக்கம் வரை சாலையின் இரு புறங்களிலும் நிற்க வைக்கப்பட்டிருந்தன. அதேபோல, கண்ணகி சிலை வரை ஒரு பக்கமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
விழா நடைபெற்ற தலைமை செயலகம் பகுதியில் 5 பேருந்துகளை நிறுத்தவே இடம் இல்லாதபோது, சாலைகளின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், கடற்கரை சாலை வழியே அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பயணிகள் சாலைகளின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆளுயர பேருந்துகளை வியப்புடன் பார்த்து சென்றனர்.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை ஒரு சிலர் தங்களது செல்போனில் ஆர்வத்துடன் படம் பிடித்து சென்றனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications