முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரம்.. சசிகலா கணவர் மீது வழக்கு.. முன்ஜாமீன் கோரி மனு
மதுரை: முள்ளிவாய்க்கால் முற்றம் விவகராம் தொடர்பாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.
அவருடன் அவரது தம்பி சுவாமிநாதனும் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார்.
தஞ்சை, விளார் சாலையில், தமிழ் ஆர்வலர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் நடவடிக்கையில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர். சுற்றுச்சுவரை இடித்து இரும்பு வேலியைப் போட்டு பாதையை அடைத்தனர்.

தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு
இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை எடுத்துப் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் குதித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கடுமையாக சாடிப் பேசினார்.

முன்ஜாமீன் கோரும் நடராஜன்
இந்த நிலையில், நடராஜனும், அவரது தம்பி சுவாமிநாதனும் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியுள்ளனர்.

பொது அமைதிக்குப் பங்கம்
இருவர் மீதும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், போலீஸ் உத்தரவை மீறி நடந்து கொண்டதாகவும் கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்தே இருவரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர்.

நான் சிறப்பு விருந்தினர் மட்டுமே
இதுகுறித்து நடராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது பெயரையும் போலீஸார் வழக்கில் சேர்த்துள்ள்ளனர். நான் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டேன். எனக்கும் அந்த விழா ஏற்பாடுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

நான் பார்வையாளன் மட்டுமே
சுவாமிநாதன் தனது மனுவில், நான் வெறும் பார்வையாளனாக மட்டுமே கலந்து கொண்டேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அப்பாவி என்று தெரிவித்துள்ளார்.
-
தைலாபுரத்தில் சசிகலாவுக்கு கமகம விருந்து.. கூட்டணி உறுதியானதால் ராமதாஸ் ஏற்பாடு -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications