நடத்தையில் சந்தேகம்... திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை இரக்கமின்றி கொன்ற சிறை வார்டன்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொலை செய்தார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொன்றுவிட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையை சேர்ந்தவர் பாலகுரு. இவர் பாளை சிறை வார்டனாக உள்ளார்.

இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் கடந்த மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திருச்செந்தூருக்கு மனைவியை அழைத்து சென்றார் பாலகுரு.
இதையடுத்து அங்கு ஒரு இடத்தில் வைத்து வேலம்மாளின் கழுத்தை வெட்டினார். இதைத் தொடர்ந்து அவர் பாளையம்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்ததால் அவரை கொன்றாக வாக்குமூலம் அளித்தார். திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications