கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது.. அசால்ட்டாக கூறிய அமைச்சர்!
நடிகர் கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது என அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது என அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். மேலும் அவரது புகாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் அன்பழன் தெரிவித்துள்ளார்.
விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிழ்ச்சிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் அந்நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்த அவர், காயத்ரி ரகுராமின் சேரி பிஹேவியர் பேச்சு சரிதான் என்பது போல் சப்பைக்கட்டு கட்டினார்.

அனைத்து துறைகளிலும் ஊழல்
அதேநேரத்தில் தமிழக அரசின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளையும் கமல்ஹாசன் கூறினார். தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

அமைச்சரிடம் கேள்வி
இந்த நிலையில் சென்னையில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார. அப்போது கமல்ஹாசனின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஒரு ஆளே கிடையாது
இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் நடிகர் கமல்ஹாசனின் புகாருக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்றார். கமல்ஹாசன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்றும் அவர் ஒருமையில் கூறினார்.

கமலைக் கண்டித்து போராட்டங்கள்
நடிகர் கமல்ஹாசனைக் கண்டித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் அன்பழகன் கமல் குறித்து இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications