சாத்தூரில் நான் போட்டியா.. அப்படியெல்லாம் இல்லை.. வைகோ மறுப்பு
தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வைகோ வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது தான் தூத்துக்குடி மாவட்ட மதிமுக. எழுச்சியுடன் காணப்படுகிறது. ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து எனக்கு வரவேற்பு அளித்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

வருகிற 26ம் தேதி மதுரையில் நடைபெறும் மக்கள்நல கூட்டணியின் மாநாடு தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். அந்த மாநாடு மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கும்.
நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. தற்போது மாநாட்டு பணியில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். மாநாட்டிற்கு பின்னர் தேர்தல் போட்டி குறித்து அறிவிப்பேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications