எனக்கு எந்த சாராய ஆலையும் இல்லை.. சொல்கிறார் தினகரன்!
தான் எந்த சாராய ஆலையும் நடத்தவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தான் எந்த சாராய ஆலையும் நடத்தவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன், டாஸ்மாக் தொடர்பாக அமைச்சர் தங்கமணி பேசியதற்கு டாஸ்மாக் அமைச்சர் என்றார். மேலும் எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார்.
ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தினகரன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அரசு முயற்சிக்கிறது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிப்பது ஏன்? என்றார். மூடப்பட்டுள்ள 810 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கிறது.

மது ஆலை இல்லை
மதுக்கடைகளை மேலும் மூடாமல் புதிதாக திறப்பது சரியல்ல. என்னை சராய ஆலை அதிபர் என்கிறார்கள். நான் மது ஆலை எதுவும் நடத்தவில்லை.

புறக்கணிக்க வேண்டியதுதானே
எங்கள் உறவினர்கள் மது ஆலை நடத்தினால், அதிலிருந்து தமிழக அரசு மது வாங்காமல் புறக்கணிக்க வேண்டியது தானே.

பொய் நிற்காது
யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர் என்று எனக்கு தெரியும். பொய் நீண்ட நாட்களுக்கு நிற்காது. இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.












Click it and Unblock the Notifications