நானும் பச்சை திராவிடன்.... திராவிடத்தை ஒழிப்பேன் என கூறவில்லை: பொன்னார் திடீர் பல்டி
நான் ஒரு பச்சை திராவிடன் என பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
சென்னை: தாம் ஒப்ரு பச்சை திராவிடன்; ஒருபோதும் திராவிடத்தை ஒழிப்பேன் என கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென பல்டி அடித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட அரசியலை ஒழிப்போம்; கழகங்கள் இல்லாத தமிழகம்தான் எங்கள் லட்சியம் என்று பாஜகவினர் முழங்கி வருகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இப்படி கூறி வருகிறார்.
இந்த விமர்சனங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது திமுக. அண்மையில் கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிட அரசியலுக்கு எதிராக பேசுவோரை களவாணி பசங்களா, புறம்போக்குகளாக என விமர்சித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தாம் திராவிடத்தை ஒழிப்பேன் என எப்போதும் கூறவில்லை; தாமும் ஒரு பச்சை திராவிடனே என பல்டி அடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் பொன். ராதாகிருஷ்ணன் இந்த கருத்துக்கும் எதிர்வினைகள் பரபரத்துக் கொண்டுதான் இருக்கின்றன,.