நான் முழுமையாக நம்புகிறேன்.. லயோலா கருத்துக் கணிப்பு குறித்து ஜி.கே.வாசன்
சென்னை: கருத்துக் கணிப்புகளை நான் புறக்கணிக்கிறேன். அதை முழுமையாக நம்புகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசுகையில், மக்கள் தலைவர் மூப்பனாரின் 14ம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெருந்தலைவர் காமராஜரின் லட்சியத்தை அடைய உறுதி ஏற்போம்.
எப்போதுமே கருத்து கணிப்புகளை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே நேரம் தேர்தலின் போது உண்மை நிலைக்கு ஏற்றவாறு மக்களின் கணிப்புகள் வாக்கு சீட்டு மூலம் பதிவு செய்யப்படும். அதைத்தான் முழுமையான கருத்து கணிப்பாக நம்புகிறேன்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது. எங்களை பொறுத்தவரை இப்போது மக்களை சந்திக்கும் இயக்கத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம்.
முதல் கட்ட பயணம் டிசம்பர் மாதம் முடிவடையும். 2வது கட்ட சுற்றுப்பயணம் பிப்ரவரியில் முடிவடையும். அதன் பிறகுதான் மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு கூட்டணியை முடிவு செய்வோம் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications