மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தர முடியாது- புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காட்டம்: வீடியோ
புதுவை அதிகாரிகள் எந்த அறிக்கையும் தருவதில்லை. இதனால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தர முடியாது என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவை அரசுக்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர முடியாது என கூறியுள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால் இருதரப்பினருமே ஒருவர் மேல் ஒருவர் புகார் கூறிவருகின்றனர்.

இதில் கிரண்பேடி கோப்புகளைப் பார்த்து உடனே கையெழுத்திட மறுக்கிறார். அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடுவதில்லை என முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிரண்பேடியோ, என்னுடன் அவர்கள் இணைந்து வேலை பார்க்க மறுக்கின்றனர் என குற்றம்சாட்டி வருகின்றார். மோதலின் உச்சமாக, மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றுத் தர முடியாது. ஏனென்றால் புதுவை அரசு நிதி செலவீனம் குறித்து எந்த அறிக்கையும் தருவதில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர் அனைவரும் ஒருங்கிணைந்துதானே வேலை பார்க்க முடியும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த சில மாதங்களாக இருதரப்புக்கும் மோதல் வலுத்து வரும் நிலையில், இதன் முடிவு எப்படியிருக்கும் என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications