எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை... அடித்து சொல்லும் ஓபிஎஸ்!
தனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தங்களை இயக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது குறித்து தற்போதைய அரசுதான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஓபிஎஸ் கூறினார்.
பாஜக எங்களை இயக்குகிறது என கூறுவது பொய். பாஜக எங்களை இயக்கவில்லை, இடைத்தேர்லில் பாஜகவும் தான் போட்டியிடுகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications