தமிழகத்திற்கு வந்த சோதனையை பாருங்க... டிவி பேட்டியில் தாறுமாறு செய்த தீபா கணவர் மாதவன்!
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவனிடம் டிவி சேனல் ஒன்று கருத்து கேட்டபோது உளறிக் கொட்டினார் அவர்.
நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எதிர்பாராமல் இவ்வளவு சீக்கிரமாக தேர்தலை நடத்த காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
என்றைக்கு கடைசி தேதி என்பது தெரியவில்லை. அது தெரிந்த பிறகு (!!!!) அதற்கு முன்பாக, கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். இதில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தனித்தே நிற்போம்.

தீபாவுக்கு எனது ஆதரவு ஏன்
உங்கள் மனைவி தீபா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, சொன்னாரே பார்க்கலாம் ஒரு பதிலை. அதையும் பாருங்கள். "அது அவங்களைத்தான் கேட்கனும். அவங்களோட விருப்பம் அது. அவர் போட்டியிட்டால் என்னுடைய ஆதரவு தேவைப்படாது. அவர்கள் போட்டியிட்டால் அவர்கள் பேரவை சார்பிலேயே நிற்கலாம்" என்றார்.

கட்சி தொடங்கினார்
தீபாவிடம் தகராறு ஏற்பட்டதால், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து விலகி, "எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக" என்று கட்சியை தொடங்கினார் மாதவன். அந்த கட்சி சார்பில் தான் போட்டியிடுவது குறித்துதான் அவர் இப்போது கூறியுள்ளார்.

ஒரு வருஷமாச்சு பாஸ்
இதில் ஓராண்டு கழித்து ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதை சீக்கிரமாக ஏன் தேர்தல் நடத்தப்படுகிறது என புரியவில்லை என மாதவன் கூறினார். டிசம்பர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், என்றைக்கு கடைசி தேதி என்று தெரியவில்லை என மாதவன் கூறியதும் நகைப்பை வரவழைப்பதாக உள்ளது.

கணவன்-மனைவி தகராறு
போயஸ் இல்லத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது அங்கு தீபா தனது டிரைவர் ராஜாவுடன் வந்திருந்தார். அப்போது மாதவன் உடன் வரவில்லை. கணவன்-மனைவி நடுவே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை மாதவன் பேட்டி ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications