யாருக்கிட்ட.. நாங்கல்லாம் சிங்கம்,புலியவே பாத்தவங்க.. நண்ட பார்த்து பயமில்லை.. அசராத ஜெயக்குமார் !
சிங்கம் புலி உள்ளிட்டவற்றை பார்த்து அரசியலுக்கு வந்த தங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிங்கம் புலி உள்ளிட்டவற்றை பார்த்து அரசியலுக்கு வந்த தங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பெண் ஒருவர் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தினார். அப்போது பேசிய அவர் நண்டு போல் மீனவர்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நான் நண்டு விடும் போராட்டம் நடத்தினேன் என்றார்.
மேலும் மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் வேகமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் அடுத்தபடியாக ஆமை விடும் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார். இதைத்தொடர்ந்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

நண்டு விடும் போராட்டம்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவரது பேசியதாவது, என் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்துகின்றனர்.

சிங்கம் புலியுடன் வாழ்ந்திருக்கிறேன்
ஆனால் நான் சிங்கம், புலி, கரடி, பல்லி, பூரான் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். வனத்துறை அமைச்சராக இருந்த போது சிங்கம் புலியுடன் வாழ்ந்திருக்கிறேன்.

நண்டுக்கு பயப்படமாட்டேன்
அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நண்டை பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அவையில் சிரிப்பலை
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 2002ல் ஜெயக்குமார் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேனியில் சிங்கம் மற்றும் புலியை பார்த்தார் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

நகைச்சுவை பேச்சு
கடந்த சில நாட்களாக சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நகைச்சுவையாக பேசி அவ்வப்போது சிரிப்பலையை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications