எனக்கும் கருணாநிதிக்குமான உறவை கொச்சைப்படுத்தினர்: குஷ்பு வேதனை
கருணாநிதிக்கும் எனக்குமானது தந்தை மகள் உறவு என்று குஷ்பு கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: எனக்கும் கருணாநிதிக்கும் இருந்தது தந்தை, மகள் உறவு என்றும் ஆனால் அதை கொச்சைப்படுத்தப்பட்டு பேசப்பட்டதாக கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில், குஷ்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் அங்கம் வகித்த குஷ்பு, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.
|
ஸ்டாலினுக்கு வாழ்த்து
இந்த நிகழ்வுக்கு பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. குஷ்பூ காங்கிரசில் இருந்தாலும், திமுக மீது அவ்வப்போது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். கருணாநிதி மறைவின்போதும் அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ‘'இளவரசர் அரசராகிவிட்டார்" என்று தனது வாழ்த்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டார்.

புகழஞ்சலி கூட்டம்
இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது பேசிய குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார்.

மரியாதை கற்க வேண்டும்
தமக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.

தந்தை-மகள் உறவு
மேலும் தமக்கும் கருணாநிதிக்கும் ஆன உறவு தந்தை, மகள் போன்றது என குறிப்பிட்ட குஷ்பு, ஆனால் அது கொச்சைப்படுத்தப்பட்டதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications