திங்கட்கிழமை நான் ஆபீஸுக்கு லீவு: பாஸிடம் மட்டும் சொல்லிடாதே!
சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய்க்கிழமை குடியரசு தின விடுமுறை என்பதால் இடையே வரும் திங்கட்கிழமை விடுப்பு எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றைய தினம் நிச்சயம் விடுமுறை தான். அலுவலகங்களுக்கு செல்பவர்களில் பலர் சேர்ந்தார் போன்று நான்கு நாட்கள் வீட்டில் இருக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை, செவ்வாயும் விடுமுறை இடையே திங்கட்கிழமை ஒரு நாளைக்கு எதற்கு அலுவலகத்திற்கு போக வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். அதனால் அன்றைய தினம் ஏதாவது ஒரு காரணத்தை கூறி விடுப்பு எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.
தற்போதே விடுப்பு கேட்டால் உயர் அதிகாரி ஒரு வேளை தர மாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. அதனால் திங்கட்கிழமை காலை போன் செய்து அல்லது இமெயில் அனுப்பி தாத்தா அல்லது பாட்டி இறந்துவிட்டார், அல்லது காய்ச்சல், தலைவலி என ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல தற்போதே பலரும் தயாராகிவிட்டனர்.
நான்கு நாட்கள் வீட்டில் இருக்கப் போகும் குஷி பலருக்கு தற்போதே வந்துவிட்டது.












Click it and Unblock the Notifications