அறவழியில் போராடி வரும் இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: விஜயகாந்த்
சென்னை: யாருக்கும் இடையூறு தராமல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தன்னெழுச்சியாக கடந்த 6 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்ற ஒரே முழக்கத்துடன் மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக போராடி வருவதற்கு மனமார்ந்த நன்றிகள்.

இரவு பகல் பாராமல் கண்ணியத்துடன் அறவழியில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications