கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன்.. ஏ.ஆர்.முருகதாஸ் !

கோக், பெப்சி குளிர்பானங்கள் பருகுவதைத் நிறுத்தி விட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோக், பெப்சி உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், கோக், பெப்சி பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது.

I stopped drinking Pepsi or coke - A.R.Murugadoss

இதனிடையே மார்ச் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடலூரில் உள்ள வேல்முருகன் சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் இளநீர், கரும்பு ஜூஸ் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: " மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே, கோக், பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன். படப்பிடிப்பு தளங்களிலும் அந்நிய நாட்டு பானங்களை பயன்படுத்த தடை செய்துள்ளேன்."என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+