For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸிடமிருந்து அதிமுகவை காப்பாற்றவே சசிகலாவை முதல்வராக்க விரும்பினேன்.. சொல்கிறார் செங்கோட்டையன்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை முதல்வராக்க விரும்பினேன் என் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல்வராக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சசிகலாவை முதல்வராக்க விரும்பியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார்.

I tried to set sasikala as CM to save the Party from OPS : Sengottaiyan

அவர் பேசியதாவது, ஸ்டாலின் பதவி ஆசையால் சட்டப்பேரவையில் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு ஒ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார்.

சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் துடிப்பதற்கு காரணம் இந்தக் கட்சியை பன்னீர்செல்வம் விற்றுவிடக் கூடாது என்பதற்காக. இரட்டை இல்லை சின்னத்தை முடக்கிவிடக் கூடாது என்பதற்காக.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை கூடியபோது அதிக பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் எப்படி அமைதிக்காத்தோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக் கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல் அமைச்சராக்க துடித்தோம்,. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

English summary
Minister Sengottaiyan says that I tried to set sasikala as a chief minister, why because to save the party from O.Paneerselvam. He betrayed Jayalalitha , says Sengottaiyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X