சோனியா ஓகே சொன்னால் மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடுவேன்... விஜயதாரணி
சென்னை: காங்கிரஸ் மேலிடம் வாய்ப்புக் கொடுத்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி.
தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் விஜயதரணி, முன்னதாக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலால் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியை அவர் இழந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசிய விஜயதரணிக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த, கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உண்மை... நேர்மை...
என்னை பொறுத்தவரை உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி உழைப்பாளிகளை ஒருபோதும் மறக்காது. அவர்களுக்கு நிச்சயம் பதவி வழங்கும்.

கோஷ்டிகள்...
கட்சியில் கோஷ்டிகள் இருப்பதாக சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய விளவங்கோடு தொகுதியில் எனது பணியை தொடர அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கூறியுள்ளார்.

வெற்றி...
எனது பணிகள் மக்களை சென்றடைந்திருக்கிறது. மீண்டும் போட்டி காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டமான நிலை இருந்தபோது, விளவங்கோடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

மக்களின் குரல்...
சட்டசபையிலும் காங்கிரஸ் கட்சியின் குரலாகவும், மக்களின் குரலாகவும் பேசி வந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சி தலைமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் விளவங்கோடு...
வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவேன்' என்றார்.












Click it and Unblock the Notifications