தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி: கருணாநிதி அதிரடி பேட்டி
சென்னை: தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் பின்வருமாறு :-

விடுதலைச் சிறுத்தைகள்...
கேள்வி:- தி.மு. கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?
பதில்:- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே!

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி...
கேள்வி:- ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு. கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பேச்சுவார்த்தை தொடரும்....
கேள்வி:- நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக் கருதலாமா?
பதில்:- தி.மு. கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

அது அவர்கள் நாகரீகம்....
கேள்வி:- அ.தி.மு.க. பல்வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவகத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும், தீய சக்தி என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்களே?
பதில்:- அ.தி.மு.க. வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications