Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி: கருணாநிதி அதிரடி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் பின்வருமாறு :-

விடுதலைச் சிறுத்தைகள்...

விடுதலைச் சிறுத்தைகள்...

கேள்வி:- தி.மு. கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?

பதில்:- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே!

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி...

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி...

கேள்வி:- ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு. கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பேச்சுவார்த்தை தொடரும்....

பேச்சுவார்த்தை தொடரும்....

கேள்வி:- நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக் கருதலாமா?

பதில்:- தி.மு. கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

அது அவர்கள் நாகரீகம்....

அது அவர்கள் நாகரீகம்....

கேள்வி:- அ.தி.மு.க. பல்வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவகத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும், தீய சக்தி என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்களே?

பதில்:- அ.தி.மு.க. வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+