எனக்குப் பின்னாடி தலைவர் ஆனவர்தான் இளங்கோவன்.. கோவை செல்வராஜ்
சென்னை: 2006ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் கட்சியின் சேவா தள தலைவராக பணியாற்றி வரும் என்னைக் கட்சியை விட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அதிகாரம் கிடையாது என்று கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவராக என்னை 06.01.2006ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளார். அன்று முதல் தொடர்ந்து தலைவராக பணியாற்றி வருகிறேன்.

நான் சேவாதளத் தலைவரான பிறகு 2006ல் தலைவராக ஜி.கே.வாசன், அதன் பிறகு கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, பி.எஸ்.ஞானதேசிகன், இப்போது இளங்கோவன் உள்ளார்.

நான் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கோ, தலைவர்களுக்கோ விரோதமாக செயல்படவில்லை. நான் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டவன். காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை, குமுறல்களை மாநில சேவாதளத் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், தொண்டர்களின் கருத்தாக தெரிவித்தேன்.
கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன். இது தொடர்பாக அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழு என்னிடம் விளக்கம் கேட்டால் அவர்களுக்கு நான் விளக்கம் தருவேன் என்றார் செல்வராஜ்.












Click it and Unblock the Notifications