தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை- இரட்டை இலைக்காக போராடுவேன்: தினகரன்
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் சசிகலா அக்காள் மகன் தினகரன்.
திருச்சி: தாம் ஒருபோதும் தனிக்கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் இரட்டை இலைக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சசிகலா அக்காள் மகன் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு சசிகலா தரப்பு உரிமை கோரியதைத் தொடர்ந்து அதிமுக (அம்மா) கட்சி என்பதற்கு தேர்தல் ஆணையம் இடைக்கால அனுமதி அளித்தது. தற்போது அதிமுக கட்சி, கொடி, சின்னம் அனைத்தும் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால் அதிமுக(அம்மா) கட்சி பெயரில் தினகரன் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தாம் தனிக்கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை; தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல; உச்சநீதிமன்றத்துக்கும் போவேன்.
இரட்டை இலையை மீட்கும் வரை போராடுவேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications