For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்ஜிரைப் போல என்னால் நல்லாட்சியைத் தர முடியும்: ரஜினிகாந்த் நம்பிக்கை

நான் எம்ஜிஆர் போல ஆட்சி கொடுப்பேன்.. ரஜினிகாந்த் பேச்சு

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆரைப் போல என்னால் நல்லாட்சியைத் தர முடியும்: ரஜினிகாந்த் நம்பிக்கை-

    சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போல தம்மால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    I will rule like MGR says Rajini

    இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ''மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள். எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை.'' என்றார்.

    மேலும் ''அரசியல் பேச கூடாது என்றுதான் இருந்தான். ஆனால் இப்போது என்னை அரசியல் பேச வைத்து விட்டார்கள்.கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்'' என்றார்

    மேலும் ''நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள். அரசியல் பூ பாதை இல்லை என்று எனக்கு தெரியும்'' என்றார்.

    முக்கியமாக ''எம்ஜிஆர் போல யாராலும் ஆக முடியாது. எம்ஜிஆர் ஆக நினைப்பது மிகவும் கஷ்டம் .எம்ஜிஆர் ஒரு யுக புருஷர். ஆனால் எம்ஜிஆர் போல மக்களுக்கான ஆட்சி கொடுக்க முடியும். நான் எம்ஜிஆர் போல ஆட்சி கொடுப்பேன்'' என்று குறிப்பிட்டார்.

    English summary
    Rajinikanth participates in a MGR Statue inauguration for first time after he announces his stand on politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X