ராமதாஸ் போன்று இழிவான செயல்களில் ஈடுபட மாட்டேன்: திருமாவளவன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைத்து சாதி தலைவர்களையும் ஒன்று கூட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற ராமதாஸ் வழியில் நான் இழிவான செயல்களில் ஈடுபட மாட்டேன். நாடாளுமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது என்ற நிலை மாறி மதவாத சக்திகள் மற்றும் மதவாத எதிர்ப்பு சக்திகள் ஆகியவற்றுக்கு இடையேயானது என்பதை உணர முடிகிறது.
இந்தியாவின் ராஜபக்சே என்று அழைக்கப்படும் நரேந்திர மோடியை தங்களின் பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதனால் தலித் மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஒரே அணியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் மீது மோடி நடத்திய காட்டுமிராண்டித் தனமான மனித உரிமை மீறல்களால் அவருக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அப்பாவி தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. அமைதியான தமிழகத்தில் சாதியின் பெயரில் கூட்டங்கள் நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதை முதல்வர் கண்காணித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். நான் தொகுதி மாறி போட்டியிடும் சூழல் எழவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications