ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால்.. ரஜினி அதிரடி பேச்சு!
சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்கான ஆட்களை சேர்த்து கொள்ளமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சராக ரசிகர்களுக்கு ஆசை, ஆனால் அப்படிப்பட்ட பணிகளை பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்யக் கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கரூர், குமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் இன்று ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர்.
நான் கவுன்சிலர் , எம்எல்ஏ, அமைச்சர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த பதவிகளை கொண்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர். சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துகாக சேரும் கூட்டத்தை சேர்த்து கொள்ளமாட்டேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications