அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெ. பிரதமராவார்: ஏ.பி. பரதன் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதன், அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெயலலிதா நாட்டின் பிரதமராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications