தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்
சென்னை : காங்கிரஸ் கட்சி எப்போதும், பெண்களுக்காகவும், தலித்துகளுக்காகவும் போராடும் என்றும், தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி காங்கிரஸ் சார்பில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியபோது, ''டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா துணிச்சலான, நேர்மையான, போலீஸ் அதிகாரியாக செயல்பட்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அவரது மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை, சி.பி.சி.ஐ.டி விசாரணையே போதும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
ஒரு பெண் அதிகாரி தற்கொலை சாதாரணமானதா? அவர் என்ன விபத்தில் இறந்தாரா? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பெண் போலீசார் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 216 பேர் இறந்து இருக்கிறார்கள்.
போலீசார் 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இதனால் அவர்களால் சுறு சுறுப்புடன் செயல்பட முடியவில்லை. அவர்களது பணியை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானதாக பேசப்பட்டது. இன்று துதிபாடும் போலீசாக விளங்குகிறது. உயர் அதிகாரிகள் 4, 5 பேர் தவிர மற்றவர்கள் வேதனையுடன் உள்ளனர்.
வேளாண் அதிகாரி தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகிய போது டி.எஸ்.பி தற்கொலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும், பெண்களுக்காக தலித்துகளுக்காக போராடும். தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்'என்று தெரிவித்தார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications