வயலில் களை எடுக்கணும்! கலெக்டர் ஆபிசிலிருந்து கூலி வேலைக்கு ஆள் அனுப்புங்க! விவசாயி விரக்தி மனு!
தென்காசி: 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருப்பின் அவர்களை தனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION ல் அனுப்பி வைக்குமாறும் மனு கொடுத்து அதிர வைத்திருக்கிறார் விவசாயி ஒருவர்.
விவசாயி கொடுத்த இந்த மனு மாவட்ட ஆட்சியரை அதிர வைக்கும் வகையில் இருக்கிறது. விவசாயி மகேஸ்வரன் கொடுத்த மனுவின் விவரம் வருமாறு;

மனுதாரர்:
த மகேஸ்வரன்,
7-133 வடக்கு தெரு, பாறைப்பட்டி,
நெல்கட்டும் செவல் கிராம பஞ்சாயத்து,
சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டம்-627758
பெறுநர்:
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தென்காசி.
ஐயா,
''மேற்படி முகவரியில் குடியிருந்து வரும் நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும் செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி-ஜுன் ல் கோடைகால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரியில் மழைகாலத்திலும் பயிர் செய்து வருகிறோம்.
இரு பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்கும் கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவை. ஆனால் ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 1080 நாட்கள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.
இதனால் பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல் சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலையின் காரணமாாக 4 மணி நேரமாக சுருங்கி விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு மேலும் அதிகமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம். நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன்.
எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை எனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION ல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூலி பஞ்சப்படி(D.A) பயணப்படி (T.A)மதிய உணவு அளதைதும் கொடுக்க தயாராக உஸ்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் எனது நிலத்தின் புகைப்பட நகலையும் இணைத்துள்ளேன்.''
நன்றி!
இவண்
ஏன் விவசாயியாக பிறந்தோம் என்று வெந்து நொந்து போயிருக்கும் பாவப்பட்ட விவசாயி
இவ்வாறு அந்த மனுவில் விவசாயி மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications