டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறன் முன்ஜாமீன் தொடருமா? சி.பி.ஐ.கைது செய்யுமா? நாளை 'க்ளைமாக்ஸ்
சென்னை: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தயாநிதி மாறன் கைதாவாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
சட்டவிரோத எக்சேஞ்ச் தொடர்பான ஏராளமான விவரங்களை தயாநிதி மாறன் மறைக்கிறார் என்று நமது ஒன் இந்தியாவிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தயாநிதி மாறன் மட்டுமே இது தொடர்பான தகவல்களைத் தர முடியும் என சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் இந்த விவரங்களை சி.பி.ஐ.யிடம் தெரிவிக்க தயாநிதி மாறன் மறுத்து வருகிறார்.

ஏற்கெனவே தயாநிதி மாறனிடம் 3 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் தயாநிதி மாறன் எந்த பதிலையும் சொல்லவில்லை என்றும் கூறுகின்றனர். தயாநிதி மாறன் விசாரணைக்கு ஒத்துழைக்கவே இல்லை என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பே தயாநிதி மாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனைப் பெற்றுக் கொண்டார். இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ.-ன் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.
ஆனால் விசாரணையின் போது நீங்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் உங்களது முன்ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகுவோம் எனவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியும் உள்ளனர். ஆனாலும் அவர் ஒத்துழைக்காத காரணத்தால் தற்போது உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. சி.பி.ஐ.விசாரணையின் போது, தாம் எந்த தவறு செய்யவில்லை என்பதை மட்டுமே தயாநிதி மாறன் கூறியிருக்கிறார். அவரிடம் சில ஆவணங்களைக் கேட்ட போது நான் தருகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் அவருக்கு திங்கள்கிழமை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் உறுதியளித்தபடி தயாநிதி மாறன் எந்த ஆவணத்தையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. இதன் பிறகும் ஒருநாள் காத்திருந்து பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியதாக கூறுகின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நாளைய விசாரணையில் தயாநிதிக்கு முன் ஜாமீன் தொடருமா? அல்லது சி.பி.ஐ.-யால் கைது செய்யப்படுவாரா? என தெரிந்துவிடும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications