ஒரு காதல்.. கட்டாய திருமணம்.. கள்ளக்காதலால் கடைசியில் கொலை! திருச்சி அருகே நடந்த கொடுமை
திருச்சி: திருச்சி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட நபர், அந்த பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (27). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது.

இதையறிந்த சத்யாவின் பெற்றோர் காதல் ஜோடியை பிரிக்க திட்டமிட்டனர். சத்யாவை கட்டாயப்படுத்தி, சேலத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
சபரிநாதனுடன் இணைந்த வாழ்க்கையின் பயனாக, அத்தம்பதிக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
ஆனால், திருமணம் ஆன பின்பும் சத்யா, பாண்டியனை மறக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பாண்டியனுடன் சத்யா தொடர்பு வைத்திருந்த விஷயம், சபரிநாதனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கணவனுடன் அவ்வப்போது சண்டை போட்ட சத்யா, தன் தந்தை வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.
இது பழைய காதலன் பாண்டியனுக்கு வசதியாக போய்விட்டது. சத்யாவுடன் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதுகுறித்து சபரிநாதனுக்கு தகவல் கிடைத்தது.
ஆத்திரம் அடைந்த சபரிநாதன், சத்யாவின் சகோதரர்களிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பாண்டியன் வீட்டுக்கு சபரிநாதன், சத்யாவின் சகோதரர்கள் நான்கு பேருடன் சென்று பாண்டியனை அரிவாளால் வெட்டி, முகத்தை சிதைத்தனர். இதை தடுக்க வந்த பாண்டியன் அண்ணன் சுரேஷுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து சபரிநாதன் மற்றும் சத்யாவின் சகோதரர்கள் தப்பியோடிவிட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாண்டியன் இறந்தார். சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமயபுரம் போலீசார், சத்யா, அவரது தாய், உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
ஒரு காதல், திருமணம், கள்ளக்காதல் என மாறி கொலையில் முடிந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications