2015ம் ஆண்டில் புற்றுநோய், இருதய நோயால் மரணம் 59% அதிகரிக்கலாம்: டாக்டர் சாந்தா எச்சரிக்கை!
சென்னை: இந்தியாவில் 2015-ம் ஆண்டில் புற்றுநோய், இருதய நோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் மரண விகிதம் சுமார் 59 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் சென்னை புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா.
புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக 3-ம்ஆண்டு இளைஞர் நல விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தினசரி காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதற்காக 60 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு போதைபொருட்கள் பயன்படுத்தாமை, சத்தான மற்றும் சரிவிகித உணவு, உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மற்றும் சுற்றுப்புற, தனிமனித சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் தொற்றா நோய்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா நேற்று கூறியதாவது:-

தொற்றா நோய்கள்:
தொற்றா நோய்கள் என்பவை கிருமிகளால் ஏற்படாமல், வாழ்க்கை முறைமாற்றத்தால் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தொற்றா நோய்களான புற்றுநோய், இருதய நோய் போன்றவற்றால் ஒவ்வொரு நொடிக்கும் 10 பேர் இறக்கின்றனர். ஒரு கோடி பேர் இறப்பில் 52 லட்சம் பேர் இறப்புக்கு தொற்றா நோய்களே காரணமாக இருக்கிறது.

அதிகரிக்கலாம்...
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் 53 சதவீதமும், 1990-ம் ஆண்டு ஏற்பட்ட இறப்புகளில் 40.4 சதவீதமும் தொற்றா நோய்களே காரணமாகும். 2015-ம் ஆண்டில் இது 59 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 காரணிகள்...
சரிவிகித உணவு உண்ணாமை, மது மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், உடல் உழைப்பின்மை ஆகிய 3 காரணிகளை சரிப்படுத்த தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் தொற்றா நோய்களால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே ஏற்படும் 80 சதவீத இறப்புகளை தடுக்க முடியும்.

சாலை விபத்துக்களால் மரணம்....
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் இறக்கும் 1.5 லட்சம் பேரில், 40 முதல் 60 சதவீதம் இறப்புகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட 69 ஆயிரம் இறப்புகளுக்கும், 3.5 லட்சம் காயங்களுக்கும் சாலை விபத்துக்கள் காரணமாகும்.

உடல் உழைப்பின்மையே காரணம்...
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு 6-வது பெரிய காரணமாக இருப்பது சாலை விபத்துகளேயாகும். இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் சுமார் 3 லட்சம் இறப்புகளுக்கு உடல் உழைப்பின்மையே காரணமாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications