லாரி மீது கார் மோதி விபத்து: 5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் தேவேந்திரபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். தர்மபுரி அருகே புரவடை என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கண்ணன் சென்ற கார் வேகமாக மோதியது.

In a accident near in Dharmapuri 4 persons dead

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். கண்ணன், சித்ரா, அர்ஜுனன் மற்றும் 5வயது குழந்தை தன்யா ஆகிய நான்கு பேரும் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீபாவளிக்காக பெங்களூரில் ஆடைகள் வாங்கிவிட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதேபோல் தருமபுரி அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+