லாரி மீது கார் மோதி விபத்து: 5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தர்மபுரி: முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் தேவேந்திரபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். தர்மபுரி அருகே புரவடை என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கண்ணன் சென்ற கார் வேகமாக மோதியது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். கண்ணன், சித்ரா, அர்ஜுனன் மற்றும் 5வயது குழந்தை தன்யா ஆகிய நான்கு பேரும் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்காக பெங்களூரில் ஆடைகள் வாங்கிவிட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதேபோல் தருமபுரி அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.