இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது புதிய 1000 ரூபாய் நோட்டு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் இன்று அறிவித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள், அறிமுகம் செய்யப்பட்டு இன்று முதல் வங்கிகள் வாயிலாகவும், நாளை முதல் ஏடிஎம்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
In next few months Rs 1000 notes will also be brought in with a new dimension and design: Shaktikanta Das, Economic Affairs Secy pic.twitter.com/wHKYW0Wj9I
— ANI (@ANI_news) November 10, 2016
இந்த நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.
புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அளவிலும், வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் என்றும், இன்னும் சில மாதங்களில் அந்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நோட்டுக்கள் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்டவையாக இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஒழிந்துவிட்டன என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை. புதிய வடிவில் சில மாதங்களில் உங்கள் கரங்களில் அவை தவழ உள்ளன. அதேநேரம், இந்தியாவில் புதிதாக ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே அறிமுகமாகியுள்ளன. மற்ற அனைத்து கரென்சிகளும் இனிமேலும் தொடர உள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications