கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து உஷார்படுத்திய பொதுமக்கள்... தேர்தல் ஆணையம் ஹேப்பி!
சென்னை: தமிழத்தில் அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து பொதுமக்கள் அளித்த புகர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 100 கோடிக்கும் மேலான பணம் சிக்கியது. மேலும் ரூ.1.30 கோடி மதிப்புள்ள சேலை மற்றும் வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமானது என்னவென்றால் பணப் பட்டுவாடா குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து 33 புகார்கள் வந்ததாம். அதன் மூலம் பெருமளவிலான பணத்தை பறிமுதல் செய்ய முடிந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தலின் போது எப்போதுமே பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பணப் பட்டுவாடாவை தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாகும். இந்த முறை ஊடகங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டது தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக இருந்தது.
ஆனால் அதையும் தாண்டி வேட்பாளர்கள் பலர் தேர்தல் அதிகாரிகளை ஏமாற்றி பலவழிகளில் வாக்காளர்களைக் "கவனிக்க" முயற்சி செய்தனர். ரூ.1.30 கோடி மதிப்பிலான சேலை மற்றும் வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதில் ஒன்றாகும்.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது, வாகனங்களில் பணம் கொண்டு செல்வது பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனாலும், ஆம்புலன்ஸ் மூலமாக பணம் கொண்டு செல்லப்பட்டது இந்த முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பதிவு செய்யாதவை ஆகும். இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து கட்டுக்கட்டான பணம் மற்றும் பணம் என்னும் இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கட்சிதான் என்றில்லாமல், அனைத்து முக்கியக் கட்சிகளும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்யவேண்டிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளனர். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர். அவைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அளித்த 33 புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications