ரஜினியை தவிர தமிழ்நாட்டில் விவாதிக்க வேறு விஷயமே இல்லையா? நடிகை கஸ்தூரி கேள்வி
தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க விவாதம் செய்வதை விட்டுவிட்டு, ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை மட்டுமே தேசிய ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்று கொந்தளித்துள்ளா
சென்னை: தமிழகத்தில் எத்தனையோ விஷயங்கள் விவாதிக்க, செய்தியாக்க இருக்கும்போது ஏன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மட்டுமே தேசிய ஊடகங்கள் விவாதிக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி அளித்துள்ள பேட்டியொன்றில், " தமிழ்நாட்டில் ரஜினியைத் தவிர வேறு விஷயங்கள் விவாதிக்க நிறைய இருக்கின்றன. ஆனால் தேசிய மீடியாக்கள் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து மட்டுமே செய்திகள் ஒளிபரப்புகின்றன.

தமிழக அரசியலில் வெற்றிடம், கடந்த டிசம்பர் முதலே உள்ளது. அதனை நல்ல ஆளுமை உள்ளவரால் நிரப்ப முடியும். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி மட்டுமே பேசுவது பக்குவமற்ற பேச்சின்றி வேறில்லை." என்று கூறியுள்ளார்.
அண்மையில் ரஜினிகாந்தை தனது பிறந்த நாளை ஒட்டி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகை கஸ்தூரி. அது பற்றி தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார்.
அதில், ரஜினியுடன் பேசியதில் இருந்து அவரின் அரசியல் பார்வை குறித்தும் திட்டங்கள் குறித்தும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது' என்று பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications