Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்!- வீடியோ

    சென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தஷ்வந்த் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளான்.

    இதனிடையே, தாய் சரளாவைக் கொன்றுவிட்டு தஷ்வந்த் மும்பைக்கு தப்பியோடினான். போலீசார் அவனை மும்பையில் கைது செய்த நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.

    புழல் சிறையில் அடைப்பு

    புழல் சிறையில் அடைப்பு

    இதையடுத்து மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த அவனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இந்நிலையில் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து தஷ்வந்த் இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

     தஷ்வந்த் வக்கில் விலகல்

    தஷ்வந்த் வக்கில் விலகல்

    அப்போது ஹாசினி கொலைவழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து உங்களுக்கு என வழக்கறிஞர் இல்லை என்ன செய்யப்போகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    நானே வாதாடிக்கிறேன்

    நானே வாதாடிக்கிறேன்

    அதற்கு பதிலளித்த தஷ்வந்த் தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தான். இதுதொடர்பாக மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி அரசின் இலவச சட்ட மையத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

    நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

    முன்னதாக நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவரப்பட்ட தஷ்வந்தை அங்கு திரண்டிருந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+