Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மப்பு" ஏறி உடைகள் கலைந்து அலம்பல்... போதையில் சாலையிலேயே துவண்ட பெண் ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

வேலூர் : போதையில், ஆடைகள் கலை(ளை)ந்து, சாலையில் துவண்டு விழுந்த பெண் ஆசிரியையை, மகளிர் போலீஸார் சென்று மீட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் சிறுவன், கோவையில் பள்ளி மாணவி, திருச்சியில் கல்லூரி மாணவி, தஞ்சையில் பட்டதாரி பெண் என மது அருந்தி தள்ளாடும் காட்சிகள் வாட்ஸ் அப்பிலும், ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

drunken

இதையடுத்து, மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என, பல்வேறு கட்சியினர், மாணவர்கள், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் பெண் ஒருவர் மது போதையில் ஆடைகள் கலைந்த நிலையில் சாலையிலேயே சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், பெங்களூரு சாலையில் உள்ள சேண்பாக்கம் பகுதி, எப்போதும் குடிகாரர்கள் கோட்டையாக உள்ளது. மாலை, 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் வழியாக யாரும் செல்ல முடியாதபடி குடித்து விட்டு கலாட்டா நடப்பதுண்டு.

இதை சமாளிக்க முடியாமல் போலீஸார் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, 8 மணிக்கு இளம் பெண் ஒருவர், ஆடைகள் கலைந்த நிலையில் போதையில் சாலையோரம் படுத்து புரண்டு, தகராறு செய்து கொண்டிருந்தார்.

அதிர்ச்சியடைந்து, அப்பகுதி வழியாக சென்றவர்கள், வேலூர் மகளிர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீஸார் விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மாற்று உடை அணிவித்து, மயக்கம் தெளிய வைத்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில், சேர்க்காடு பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண், பி.ஏ., படித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிகிறார் என்பதும், கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.

வேலூர், புதிய பேருந்து நிலையம் வந்த அவர், விரக்தியில் அளவுக்கு மீறி மதுவை குடித்துள்ளதும் தெரியவந்தது. இதை கேட்டு நொந்து கொண்ட கொண்ட மகளிர் போலீஸார், அவரது கணவரை, அழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.

மதுவிலக்கு வந்தால் தான், பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், படித்து ஆசிரியர் வேலை பார்க்கும் பெண்ணே, குடித்து விட்டு, ஆடை கலைந்த நிலையில், மயங்கி கிடந்தது வேலூர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+