தமிழகம், புதுச்சேரியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை: நஜிம் ஜைதி
சென்னை: பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகள் யாரேனும் இரு பதவிகள் வகிக்கிறார்களா என ஆய்வு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பாக இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி புதுச்சேரியில் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோனைக்கு பிறகு நிருபர்களுக்கு நஜிம் ஜைதி செய்தியாளர்களுக்கு கூறியதாவது:
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகளின் புகார்களை பரிசீலிப்போம். பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகள் யாரேனும் இரு பதவிகள் வகிக்கிறார்களா என ஆய்வு செய்யப்படும்.
வாக்குப் பதிவை கண்காணிக்க துணை ராணுவப் படை ஈடுபடுத்தப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப்கேமரா பொருத்தப்படும். இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications