இந்தியாவில் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருக்கிறது: நரேந்திர மோடி
சென்னை: இந்தியாவின் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருப்பதாலேயே பாய்லின் புயல் இங்கே நீடித்திருக்கவில்லை என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை வருகை தந்த மோடி விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று இந்த உலகமே நம்மைப் பார்த்து நகைக்கிறது. யாரோ ஒருவர் கனவு கண்டனாராம். அவர் சொன்னபடி ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக நம்பி அதை தேடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த ஆயிரம் டன் தங்கத்தைவிட பல்லாயிரம் கோடி கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. அதை முதலில் மீட்கட்டும் மத்திய அரசு.

அண்மையில் இந்தியாவை பாய்லின் புயல் தாக்கியது. ஆனால் அந்தப் புயல் இங்கே நீடித்து நிலைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவிலேயே மற்றொரு புயல்.. மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் மாற்றத்துக்கான சூறாவளி அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதை தமிழ்நாட்டிலும் நான் காண்கிறேன். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் நிச்சயம் தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் கனவுகள் பாஜகவின் கனவுகள்.
திருச்சியில் மிகப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினோம். மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இதற்குக் காரணம் தமிழக மக்களும் பாரதிய ஜனதா தொண்டர்களும்தான். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறவே நான் இங்கு மீண்டும் வந்துள்ளேன்.
காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications