26ம் தேதியும்: இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த பிரச்சனைகளும்
சென்னை: நரேந்திர மோடி பதவியேற்ற 26ம் தேதி அன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களை நினைவு கூர்வோம்.
நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக இன்று அதாவது மே 26ம் தேதி பதவியேற்றார். 26ம் தேதி என்பது இந்தியா, பாகிஸ்தானுக்கு நல்ல தேதி இல்லை என்று கூறலாம்.
அது ஏன் என்று பார்ப்போம்.

1999
1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி கார்கில் போரின்போது ஆபரேஷன் சபேத் சாகரை இந்திய விமானப்படை அறிமுகப்படுத்தியது. மே 26ம் தேதி தான் கார்கிலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் இடையே சண்டை நடந்தது.

அகமதாபாத் குண்டுவெடிப்பு
2008ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 70 நிமிடங்களில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட பாகிஸ்தானிடம் உதவி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை இந்தியர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

இன்று
2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி அதாவது இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்தார்.












Click it and Unblock the Notifications