தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
நெடுந்தீவு அருகே 3 படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரே நாளில் ஏற்கனவே 49 மீனவர்களை கைது செய்துள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அரங்கேறியுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்கள் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிர்ப்பந்தத்தால் விடுவிக் கப்பட்டு வருகின்றனர்.
இதுபோல சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 49 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று 12 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச்சென்றுள்ளது. கடந்த 3 தினகங்களுக்குள் 61 மீனவர்களை சிறை பிடித்துச்சென்றுள்ள இலங்கை கடற்படை.












Click it and Unblock the Notifications