தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம்… இலங்கை அமைச்சர் சாமிநாதன் திமிர் பேட்டி
சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் அவர்களை சுடும் அதிகாரம் உள்ளதாக இலங்கை மறு சீரமைப்பு, மறு குடியேற்றும் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வந்த சாமிநாதன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் அகதிகள் ஓராண்டிற்குள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார். மேலும் பேசிய அவர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரிய வசதிகள் செய்த பின் இங்குள்ள தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றார்.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்துப் பார்க்கவில்லை என்ற அவர், இலங்கை வடக்கு மாகாணத்தில் 90 சதவீத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறிய அவர், மீதமுள்ள 10 சதவீத கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் இடமுள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே எல்லை தாண்டும் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ள நிலையில் சென்னைக்கு வந்துள்ள இலங்கை அமைச்சர், எல்லை தாண்டினால் மீனவர்கள் சுடப்படுவார்கள் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications