15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகள் சந்திக்கும் பாலியல் சவால்கள்... ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான 5 சதவீத சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக நெலலையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பது குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நெலலையில் நடந்தது. தமிழ்நாடு தன்னர்வ செயல் குழுமத்தின் தலைவர் ராஜன் வரவேற்றார்.

குழுமத்தின் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமை ஏற்று பேசுகையில், இந்தியாவில் உள்ள குழந்தை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர். வீட்டு சூழல் காரணமாக பலர் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர்.

Indian girls face various types physical molestation: Seminar

குழந்தைகள் சமூக சூழலை எதிர் கொள்ளும் போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு கட்டாய பாலியல் தொந்தரவு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்த பின்னர் மருத்துவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், தடவியல் சாட்சிகளை சேகரித்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு நமக்கு இருக்கிறது என்றார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பது, பாலியல் வன்முறை நடந்த பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.

கருத்தரங்கில் நெல்லை எஸ்பி விக்ரமன், இந்திய மருத்துவர் சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் அன்புராஜன், திருமலை கொழுந்து ஆகியோர் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+