காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்லாம்- தியாகு

Subscribe to Oneindia Tamil

Indian may boycott Commonwealth meet, says Thiyagu
மதுரை: காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தியாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

1931-இல் இருந்து 1949 வரை இங்கிலாந்து காலனி நாடுகளின் அமைப்பாக காமன்வெல்த் இருந்தது. அதற்கு பிறகுதான் காமன்வெல்த் நாடுகளின் சபையாக மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த அமைப்புக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரம் கிடையாது. அதன் தலைவர்கள் கூடி ஒரு முடிவு செய்து அறிக்கை வெளியிடுகின்றனர்.

இருந்தபோதும் மனித உரிமை மீறல், இனப்படுகொலைகள் தொடர்பாக பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பிஜி, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, நைஜீரியா நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போது மனித உரிமை மீறல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குமாறு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த இந்தியா, தமிழர்களின் கோரிக்கையை புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளது. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பேன் என பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றார் தியாகு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+