வங்க கடலில் இந்தியா–கொரியா கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நாளை தொடங்குகிறது
சென்னை: இந்தியா மற்றும் கொரியா கடற்படையினர் இணைந்து வங்க கடலில் நாளை முதல் 4 நாட்கள் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு சென்றனர்.

தற்போது இந்திய கடற்படையுடன் இணைந்து கொரியா நாட்டு கடலோர காவல் படையினர் 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் வங்க கடலில் சகோஜ்-ஹையோபிளையோக் என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக கொரியா நாட்டில் இருந்து கொரியா கடற்படை கமிஷனர் ஜெனரல் ஹாங்கில்க்-டே தலைமையில், கொரியா கடற்படையினர் கொரியா கடலோர காவல் படை கப்பலில் சென்னை துறைமுகம் வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் ராஜேந்திர சிங் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படை வீரர்கள் ஐ.சி.சி. சமுத்திரா பேகேர்டார் போர்க்கப்பலில் சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இருநாட்டு கப்பல் படைகளின் வலிமையை அதிகரிக்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
சமூக விழிப்புணர்வுக்காக நாளை மறுநாள் வியாழக்கிழமையன்று கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் 2 நாட்டு போர்க்கப்பல்களையும் பார்வையிட உள்ளனர். பின்னர் 11-ந் தேதி இரவு கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications