வங்க கடலில் இந்தியா–கொரியா கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நாளை தொடங்குகிறது
சென்னை: இந்தியா மற்றும் கொரியா கடற்படையினர் இணைந்து வங்க கடலில் நாளை முதல் 4 நாட்கள் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு சென்றனர்.

தற்போது இந்திய கடற்படையுடன் இணைந்து கொரியா நாட்டு கடலோர காவல் படையினர் 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் வங்க கடலில் சகோஜ்-ஹையோபிளையோக் என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக கொரியா நாட்டில் இருந்து கொரியா கடற்படை கமிஷனர் ஜெனரல் ஹாங்கில்க்-டே தலைமையில், கொரியா கடற்படையினர் கொரியா கடலோர காவல் படை கப்பலில் சென்னை துறைமுகம் வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் ராஜேந்திர சிங் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படை வீரர்கள் ஐ.சி.சி. சமுத்திரா பேகேர்டார் போர்க்கப்பலில் சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இருநாட்டு கப்பல் படைகளின் வலிமையை அதிகரிக்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
சமூக விழிப்புணர்வுக்காக நாளை மறுநாள் வியாழக்கிழமையன்று கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் 2 நாட்டு போர்க்கப்பல்களையும் பார்வையிட உள்ளனர். பின்னர் 11-ந் தேதி இரவு கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.
-
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications