கடலூரில் 5 நிமிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வாய்ப்பை இழந்த சுயேட்சை
கடலூர்: கடலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததால், அவரது மனுவை வாங்க முடியாதென கோட்டாட்சியர் திருப்பியனுப்பி விட்டார்.
கடலூர் சட்டசபைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக எம்.சி. சம்பத்தும், திமுக வேட்பாளராக வழக்கறிஞர் இள. புகழேந்தியும் மனு தாக்ல் செய்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் 3 மணி வரையில் யாரும் வராத நிலையில், மனுத்தாக்கல் முடிந்தது என்று அலுவலக வாசலில் நின்றுக் கொண்டிருந்த போலீசார் நினைத்திருந்தனர். அப்போது திடீரென ஒருவர் வேகமாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்து விட்டதாக போலீசார் கூறியும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திப்பதாக கூறி உள்ளேச் சென்றார்.
கோட்டாட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரியை சந்தித்து வேட்புமனுத்தாக்கலுக்கான ஆவணங்களை வழங்கினார். ஆனால் மணி 3.05 ஆகியிருந்ததால் மனுவை வாங்க முடியாதென திருப்பியனுப்பினார். 5 நிமிடத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு தவற விட்ட சோகத்தில் திரும்பினார் அந்த வேட்பாளர்.
ஏமாற்றமடைந்த வேட்பாளரின் பெயர் கு.தங்கராசு, 59 என்பதாகும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த தங்கராசு, கடலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார். இவர் மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுச் சென்றுள்ளார். விண்ணப்பத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றினை பெற்று வருவதற்காக மீண்டும் விழுப்புரம் சென்று வர நேரமாகி விட்டதாக கூறினார் தங்கராசு.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications