இந்தூர்-குமரி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்
இந்தூரில் இருந்து குமரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: இந்தூரில் இருந்து குமரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தூரிலிருந்து குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ரயிலில் குண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படி இந்த தகவல் பரப்பப்பட்டது என்று இப்போதுவரை செய்தி வெளியாகவில்லை.

இந்த நிலையில் ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். அதோடு எல்லோரும் வெளியேற்றம் ரயிலைவிட்டு குதித்து வெளியேறி இருக்கிறார்கள்.
இந்த ரயில் வாணியம்பாடி அருகே பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதே பகுதியில் வரிசையாக வரவேண்டிய 3 ரயில்கள் வாணியம்பாடி அருகே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications