ஜெயலலிதாவை யார், யார் சந்தித்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும்.. ஜெயக்குமார் பேட்டி
சென்னை: ஜெயலலிதாவை மருத்துவமனையில் யார், யார் சந்தித்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின்போது, ஜெயலலிதாவை பார்த்தது இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு இன்று அளித்த பேட்டியில், நான் மட்டுமில்லை, எல்லா அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்தித்தோம் என நேர் எதிராக கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது, டிடிவி தினகரன் நீதிபதி வேலையை பார்க்க வேண்டாம். யார் யார் ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது விசாரணை முடிவில் தெரியவரும். விசாரணை கமிஷன் அறிக்கை அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து பிறகு நிர்ணயிக்கப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications