நெல்லை அருகேயுள்ள மலைப்பகுதியில் விமானப்படைத் தளமா? - அதிகாரிகள் ஆய்வு
நெல்லை: நெல்லை அருகே பாதுகாப்பை உறுதி செய்ய விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது. இதற்காக அதி நவீன மொபைல் ரோடார்கள் சோதனை செய்து வருகின்றன.
நெல்லை மாவட்டம் நாட்டின் பாதுகாப்பு கேந்திரத்தின் முக்கியத்துவத்தில் இருந்து வருகிறது. பணங்குடி அருகே இஸ்ரோ திரவ எரிபொருள் உந்துதல் மையம் இருக்கிறது. இந்த மையத்தில் இஸ்ரோவின் இருந்து ஏவப்படும் ராக்கெட் கிரியோஜெனிக் என்ஜின்கள் தயாரிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் என்ஜின்கள் தான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவுப்படுகிறது.

இது மிகுந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம், தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளத்திற்கு பயன்படுத்தப்படும் கனநீர் ஆலை போன்றவை இயங்கி வருகின்றன.
கூடங்குளம் மற்றும் இஸ்ரோ மையம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் இஸ்ரோ மையத்தை சுற்றி ஆளில்லாத சிறிய அளவிலான கிளைடர் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது.
இதுக்கு வலு சேர்ப்பது போல இஸ்ரோ மைய மலைப்பகுதியில் வைபை சிக்னல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் வெளியானதால் அப்பகுதியில் நெல்லை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கிளைடர் விமானம் பறந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இஸ்ரோ, கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்தது.
இலங்கை மாலத்தீவு கடற்பகுதிகளில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதாக உளவுத்துறையினர் மத்திய அரசை உஷார்படுத்தினர். இந்த பகுதிகளில் உளவு விமானங்களை கண்காணிக்க அதி நவீன ரேடார் வசதிகள் இல்லாதது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஐந்து அதிநவீன மொபைல் ரோடார் வாகனங்கள் வந்தன.
அங்கு இரு நாட்கள் ரோடார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் இந்த பகுதியில் விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications