நெல்லை அருகேயுள்ள மலைப்பகுதியில் விமானப்படைத் தளமா? - அதிகாரிகள் ஆய்வு
நெல்லை: நெல்லை அருகே பாதுகாப்பை உறுதி செய்ய விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது. இதற்காக அதி நவீன மொபைல் ரோடார்கள் சோதனை செய்து வருகின்றன.
நெல்லை மாவட்டம் நாட்டின் பாதுகாப்பு கேந்திரத்தின் முக்கியத்துவத்தில் இருந்து வருகிறது. பணங்குடி அருகே இஸ்ரோ திரவ எரிபொருள் உந்துதல் மையம் இருக்கிறது. இந்த மையத்தில் இஸ்ரோவின் இருந்து ஏவப்படும் ராக்கெட் கிரியோஜெனிக் என்ஜின்கள் தயாரிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் என்ஜின்கள் தான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவுப்படுகிறது.

இது மிகுந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம், தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளத்திற்கு பயன்படுத்தப்படும் கனநீர் ஆலை போன்றவை இயங்கி வருகின்றன.
கூடங்குளம் மற்றும் இஸ்ரோ மையம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் இஸ்ரோ மையத்தை சுற்றி ஆளில்லாத சிறிய அளவிலான கிளைடர் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது.
இதுக்கு வலு சேர்ப்பது போல இஸ்ரோ மைய மலைப்பகுதியில் வைபை சிக்னல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் வெளியானதால் அப்பகுதியில் நெல்லை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கிளைடர் விமானம் பறந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இஸ்ரோ, கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்தது.
இலங்கை மாலத்தீவு கடற்பகுதிகளில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதாக உளவுத்துறையினர் மத்திய அரசை உஷார்படுத்தினர். இந்த பகுதிகளில் உளவு விமானங்களை கண்காணிக்க அதி நவீன ரேடார் வசதிகள் இல்லாதது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஐந்து அதிநவீன மொபைல் ரோடார் வாகனங்கள் வந்தன.
அங்கு இரு நாட்கள் ரோடார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் இந்த பகுதியில் விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications